முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கானலோ! என் காதலோ! 28

  சினம் கொண்ட வேங்கையாய் அவனிடம் சீறி வெளிவந்திருந்தவளுக்கு அவனை பற்றி யோசிக்கவும் விருப்பமில்லை.. அவன் அற்ப புத்தியும் குணமும்  தெரிந்துவிட்டது.. இனியும் அதையே நினைத்து மருகி அழுது தன்னை தானே முடக்கிக் கொள்ள எண்ணமில்லை..  ஏற்கனவே எடுத்த தவறான முடிவு ஒன்று போதும்.. என நினைத்ததற்கு உயிர் வாரிசுருட்டிய நிமிடம் ஒரு காரணம் என்றால் காப்பாற்றியவன் கொடுத்த உரை அதற்கும் மேலானதே..  அசோக் சொன்னது சரிதான்.. எனக்கு என்ன வேணும்ன்னுகிற முடிவ நான் முதல்ல தெளிவாக எடுக்கணும்..  அப்போதான் அதுக்கு அடுத்த படிகளில் என்னால சரியா கால் வைக்க முடியும்..  என எண்ணி கொண்டவளாய் இப்போதைக்கு மனதை குழம்பிய குட்டையாக்கும் அவன் சம்பந்தப்பட்ட அனைத்து யோசனைகளையும் ஓரம் கட்டி விட்டாள்..  வேலையிலும் ஆழ்ந்து விட்டாள். அனைவரும் தம் தமது வேலையில் மூழ்கி கிடக்க திடீரென அவள் போன் அடித்து தன் இருப்பை காட்டியது.. எடுத்து பார்க்க புது நம்பர். நம்பர் புதுசா இருக்கே.. யாரு.. அதுவும் வேலை நேரத்துல.. புருவம் இடுங்க யோசித்தவள்.. அடிக்கடி வரும் ஸ்பேம் காலாய் இருக்கும் என சைலன்ட் போட்டு விட்டு வேலையில் ம...

கானலோ! என் காதலோ! 27

 உனக்கும் நேரம் ஆகுது.. நீ கிளம்பு அசோக்.. நான் பஸ் பிடிச்சு போய்க்  கிறேன்... " என எழுந்தவளை விடாப்பிடியாய் வண்டியில் ஏற்றி கிளம்பி இருந்தான் அசோக்..  வண்டி சீறியதில் முகத்தில் மோதிய அனல் காற்று நேரம் மதியத்தை தொட போகிறது என காட்டியது..  ஆனால் நீரில் நனைந்திருந்தவளுக்கு அந்த வெப்ப காற்றும் கூட இதமாய்.. '' வீட்டுக்கு போய் டிரஸ் சேன்ஜ் பண்ணிட்டு போறியா? என கேட்டவனிடம்..'' இல்லை இல்லை வேண்டாம்".. அவசரமாய் மறுத்தாள்.. " ஏற்கனவே  மணி பதின்னொன்னாகிடுச்சு.. பர்மிஷனா சொல்லிக்கிறேன்.. அதோட அடிக்கிற வெயில்ல போறதுக்குள்ள டிரஸ்சே காஞ்சிரும் போல.. "அவள் கூற அதற்கு பின் எதுவும் பேசவில்லை அவன்.. திடீரென ஏதோ தோன்றியவளாய்.. "ஆமா அசோக்.. நீ எப்படி சரியான நேரத்துக்கு அங்க வந்த.. "என அதுவரை  மறந்து விட்டிருந்த கேள்வியை அவள் கேட்டதில்.. ''ஹான்.. '' அவன் விழிகள் இடுங்கி சுற்றி வளைய வந்து.. முன் சென்ற காரில் காரணம் கொண்டு நிலைத்தது.. " அது ஆபீஸ்ல இருந்து ஒரு பைல் கொடுத்து விட்டாங்க..  அத கொடுத்துட்டு திரும்பி வரப்போதான் உன்னை பார்த்தேன்.. ...

கானலோ! என் காதலோ! 26

 தன் முன் அமர்ந்திருந்தவனை தவிப்பாய் பார்த்து கொண்டிருந்தாள் ஜான்வி.. அவன் முகம் கல்லாய் இறுகி கிடந்தது.. அவள் நா மேலண்ணத்தோடு ஒட்டி போனதையும் கண்டுகொள்ளாமல் அழுத்தமான அவன் கூர் கண்கள் கத்தியாய் பாய்ச்சி அவளை கீச்சியது.. எவ்வளவு நேரம் தான் இப்படி தர்ம சங்கடத்தோடு அமர்ந்திருக்க முடியும்..?? அஷோக்.. ப்ளீஸ்டா.. என்ன மன்னிச்சிடு ஏதோ அப்போ இருந்தா குழப்பத்துலையும் கவலையிலையும் அப்படி ஒரு முடிவு எடுத்துட்டேன். அதுக்காக இவ்வளவு கோபப்படாத.. என்ன மன்னிச்சிடு... மெல்ல பேச்சை ஆரம்பித்தவளை கண்களில் அனல் அடிக்க அவன் ஏறெடுத்து பார்த்த பார்வையில் சப்தமும் ஒடுங்கிப் போனது அவளுக்கு..   கோபமாவா.. கொலைவெறியில இருக்கேன் பல்லை கடித்துக் கொண்டு அவன் கூறிய வார்த்தையினில் அவன் ஆத்திரம் பன்மடங்காய் பிரதிபலித்தது.. அ.. அஷோக்.. ப்ளீஸ் நீயாவது என்ன புரிஞ்சுக்கோயேன்.. என் மனசு அந்தளவு வலிச்சு போச்சு.. என்னால அந்த நிமிஷம் அதை தவிர்த்து வேறு எதையுமே யோசிக்க முடியல.. இல்லன்னா இப்படி ஒரு முடிவை நான் எடுத்திருப்பேனா.. பரிதாபமாய் அவள் கேட்டதில் கேட்க கண்கள் முறைப்பில் இடுங்கின.. " அப்படி என்ன தலை போற பிரச்...

கானலோ! என் காதலோ! 25

 ஆழ் கடலின் நீர் எவ்வளவு அமைதியாய் இருந்தாலும் மேற்பரப்பு பயங்கரமாய் ஆர்ப்பரிபதை போல் கடற்கரையின் கடைசி புள்ளியில் இலக்கற்று வெறித்துக் கொண்டிருந்தவளின் மனம் உள்ளுக்குள் பேயாய் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தது. எப்படி அப்படி ஒரு வார்த்தையை அவனால் கூற முடிந்தது.. அவன் வார்த்தை தந்த வலியை மறக்க முடியாமல் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.. சிலர் குடும்பத்துடன் சிலர் தம் தம் துணையுடன் சிலர் தங்கள் குழந்தையுடன்.. சிலரோ தங்கள் வேலையுடன்.. என ஆளாளுக்கு ஒவ்வொரு துணையோடு இருக்க தான் மட்டும் நிர்கதியாய் நிற்பதாய் தோன்றியது.. ஒருவனை உயிருக்குயிராய் காதலித்தது அவ்வளவு தவறா? இல்லை அவனை நம்பி என்னை இழந்தது தவறா.. எதையும் கொஞ்சமும் காதில் வாங்காமல் புரிந்து கொள்ளாமல் தன்னை இப்படி காயப்படுத்துகிறானே.. கண்களில் இருந்து பொலபொலவென உதிர்ந்த நீர் மார்பு சேலையை நனைத்தது.. அவன் பேசுவதை எல்லாம் பெரிதாய் எடுத்துக் கொள்ளக் கூடாது.. முக்கியமாய் அழக்கூடாது என  எடுத்திருந்த முடிவு எல்லாம் எப்போதோ தவிடுபொடியாகி போயிருக்க.. அவன் விட்ட வார்த்தைகளை ஜீரணிக்கவே முடியவில்லை.. இதயம் ஆழம் வரை ஊடுருவி அவளை தவிக்க வைத்த...

மரணக்கிணறே! மயக்காதே..! 26

 வர்மா கொஞ்சம் இந்த பொருள் எல்லாம் இறக்கி வைக்க உதவி செய்ரியா.. என வந்தவனிடம் சாமி கேட்க.. முன்னிருந்ததை கண்டு விழித்தான் வர்மன். சீர்வரிசையில் இருந்து திருமணத்திற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் பெரிய லாரியில் வந்து இறங்கியிருக்க அனைத்தையும் தான் எடுத்து வைக்க வேண்டுமா?.. அவன் இருக்கும் உயரத்திற்கும் அசாத்திய பலத்திற்கும் ஒன்றும் அவ்வளவு கஷ்டமில்லை என்றாலும் வைத்திருக்கும் பொருட்கள் அதிகம்.. அதிலும் விருந்தாளியாய் வந்த இடத்தில் வேலை செய்வதற்கு அவசியம் என்ன.. இது அனைத்தையும் தானே ஏற்றி இறக்க வேண்டும் என்றால் நிச்சயம் இரண்டு மணி நேரத்தை தாண்டி விடுமே.. வந்ததில் தூரிகாவை உஷார் பண்ணலாம் என பார்த்தால் அவள் பக்கமே செல்ல முடியாத அளவிற்கு வேலையை கொடுத்தால் எங்கிருந்து அவளிடம் பேசுவது நெருங்குவது..  எரிச்சலானான்.. தான் கேட்ட அமைதியாய் நிற்பவனை பார்த்தார் சாமி.. அவன் பார்வையிலேயே எண்ணத்தை யூகித்தவராய் நானும் உனக்கு உதவி செய்கிறேன் வர்மா.. தனியா செய்ய முடியாதில்லையா.. அதுக்கு தான் கூப்பிட்டேன்..  என்றபடி லாரியில் இருந்த பீரோவை அவர் ஒரு பக்கமாய் தூக்க மேல்பக்கமாய் இவன் பிடித்துக் கொண...

கானலோ! என் காதலோ! 24

 அதன் பின் ஆர்யன் அவளை ஒருவழியாக்கி விட்டான்..  வேலையில் அவள் மூழ்கி இருந்தாலும் அவள் இடத்தை தேடி வந்து என்ன வேலை செய்திருக்கிறாய்.. என நேற்று அவள் நேரத்தை கணக்கில் எடுக்காது முடித்து சென்ற பைலை அவள் முகத்திலேயே தூக்கி விசிறி அடித்தான்.. கணினியில் கவனமாய் இருந்தவள் எதிர்பாராத அடியில் சட்டென பதறி எழ.. இடியட்.. என்ன வேல பாத்துருக்க.. ஒழுங்கா ஒரு டிசைன வரைய தெரியல.. நீஙக எல்லாம் எதுக்கு வேலைக்கு வர்றிஙக.. மனுஷன் உயிர வாங்கவா.. இப்போ தான் தெரியுது.. அவன் ஏன் இந்த கம்பெனிய என் கைக்கு இடம் மாத்தி விட்டான்னு.. வேலைக்காகாத வேஸ்ட் வச்சுக்கிட்டு வேல பாத்தா இப்படி தான்.. வாய்க்குள் முணுமுணுப்பது போல் கடைசி வாக்கியம் தெரிந்தாலும் நன்றாகவே சத்தமாய் கூறியதில் அனைவரும் சட்டென சிரித்து விட முகம் கருத்து போனாள் ஜான்வி. இதை வரைய தானே நேற்று தாமாதமாகி.. பேருந்து கிடைக்காமல் ஒரு கயவனிடம் சிக்க போய்.. அப்போது மட்டும் அசோக் வராமல் இருந்திருந்தால் என் நிலை.. என் குழந்தையோடு நான் செலவழிக்கும் அந்த சிறு நேரத்தையும் விட்டு இதை முடிக்கவேன இருந்தேனே.. அதை போய் கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் எப்படி பேசுகிறான...

கானலோ! என் காதலோ! 23

 ஆர்யன் கூறிய வார்த்தைகளில் மொத்தமாக சிதிலம் அடைந்து போயிருந்தாள் ஜான்வி. எப்போது அவன் அறையை விட்டு வெளியே வந்தாளோ.. அவள் இடத்தில் வந்து அமர்ந்தாளோ.. கண்கள் கணினியை மொய்க்க அதிலிருந்த எழுத்துக்கள் தெரியாத அளவிற்கு   கண்ணீர் திரையிட்டு நின்றது. ஒன்றையும் பார்க்க முடியவில்லை..  உள்ளுக்குள்ளிருந்து எழுந்த பேரழகி ஒன்று அவளை வாரி சுருட்ட ஆரம்பித்தது.. என் ஆரி.. என் ஆரி.. ஒருமுறை நான் சொல்ல வர்றதை முழுசா கேட்டிருந்தா கண்டிப்பா அப்படி ஒரு முடிவை எடுத்து இருக்க மாட்டான்.. என இத்தனை வருடமாய் அவள் கட்டி வைத்திருந்த நம்பிக்கையை ஒரே வார்த்தையை கடற்கரையின் மணல் வீடாய் உடைத்துப் போட்டிருந்தான்.. அதிலும் அண்ணன் பெண்ணை பார்க்கலாமா என மணிமேகலை கேட்டபோது தன்னை ஓரக்கண்ணால் பார்த்தபடியே சரி என்று கூறினானே.. அப்படி என்றால் அவன் மனதில் நான் இல்லையா..   ஆனால் என்னை நினைத்து தான் அவன் இவ்வளவு வருடமாய் கல்யாணத்தை தவிர்க்கிறான் என மணிமேகலை கூறியதை கேட்டேனே... ஐயோ... வின்வின்னேன தெறித்த முன்னந்தலையை அழுத்தி பிடித்தாள்..  கனவில் கூட நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்வாய் தோன்றியது இப்ப...