முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கானலோ! என் காதலோ! 11

 பட்டமாய் பறந்து கொண்டிருந்த மனதை இழுத்து பிடித்து வேலைக்குள் அமுக்கி விட்டாள் ஜான்வி.. முதலில் அவன் மாற்ற கூறிய மருத்துவமனை வரைபடத்தில் அவன் சுட்டி காட்டிய தவறுகளை சரி செய்ய முற்பட்டவளாய்.. மீண்டும் முதலிலிருந்து வரைய ஆரம்பித்திருந்தாள்..  கிட்டத்தட்ட வரைய மட்டுமே அரை நாளாவது எடுத்து விடும் அளவிற்கு உன்னிப்பான வரைபடம்.. நேற்று மாலை ஆரம்பித்து இப்போது தான் முடித்திருந்த அந்த முதல் படத்தை பரிதாபமாய் பார்த்த படி அடுத்த காகிதத்தை எடுத்து மீண்டும் புள்ளியிலிருந்து வரைய ஆரம்பித்திருந்தாள். டீ டைம் வந்திருந்தது.. அனைவரும் ஆளுக்கு ஒரு பக்கமாய் எழுந்து சென்றிருக்க.. இவள் மட்டும் குனிந்த தலை நிமிராமல் அமந்திருந்ததில்.. ஜான்வி.. எழுந்து வந்த படி அவள் தோளை பிடித்து நாடியை குற்றினாள். ஹாப்பப்பா.. உன் கடமை உணர்ச்சிய பாத்து உடம்பெல்லாம் புல்லரிச்சு போகுது.. சரி வா.. இப்போ போய் டீ குடிச்சுட்டு வரலாம்.. " அவள் கை பிடித்து இழுக்க.. " ப்ச்..விடு திவி.. இதை மட்டும் முடிச்சிட்டு வந்துடறேன்.. " என்றவளை  "அதெல்லாம் அப்புறம் " என விடாக்கண்டியாய் இழுத்து கொண்டு நடந்தாள். நமக்கு வேண்டி...

கானலோ! என் காதலோ! 10

 தன்னிடத்தில் வந்து அமர்ந்தவளுக்கு அவன் பேசிய பேச்சுக்கள் காதுக்குள் ரீங்காரம் இட்டுக் கொண்டிருந்தது. எவ்வளவு முயன்றும் மனதை ஆறுதல் படுத்த முடியவில்லை.  எத்தனை நாட்கள் கழித்து அவனை பார்த்திருக்கிறாள். அவன் வேண்டாம் என கூறி சென்றிருந்தாலும் கனவிலும் கூட அவனை தவிர இன்னொருவனை நினைத்தும் பார்க்காதவளை என்னென்ன வார்த்தைகளால் வஞ்சித்து விட்டான்.. மலருக்கு மலர் தாவும் வண்டாமே.. எவ்வளவு அசிங்கமான வார்த்தை.. உள்ளுக்குள் மனம் எரிமலையாய் கணன்று கொண்டிருந்தது.. அவனை எதிர்பாராமல் இப்படி ஒரு இடத்தில் பார்த்ததில் அப்படி அதிர்ந்து நின்றிருக்க கூடாதோ.. அதனால் தானே அவ்வளவு அசிங்கமான பேச்சு..  ச்சி.. ஒரு காலத்தில் இவனையா காதலித்தேன்.. அவன் தன்னையும் தன் வயிற்றில் வளர்ந்த குழந்தையையும் வேண்டாம் என கூறி சென்ற போதும் கூட அனைத்தும் அவன் தாயின் சூழ்ச்சி.. மற்ற படி அவன் நல்லவன் தான்.. என அப்போதும் காதல் பேய் கண்ணை மறைக்க..  இத்தனை நாட்கள் தன்னை தேற்றி கொள்ள முடிந்தவளால் இப்போதும் அந்த பூச்சை பூசி மொழுக முடியவில்லை. அதிலும் அவன் பார்த்த பார்வை.. அவ்வளவு தன்னை கீழ் தரமாய் காட்டியதே.. அது சரி.. ...

கானலோ! என் காதலோ! 09

 அடித்து பிடித்து இருந்த டிராபிக் ஜாமை கடந்து ஒரு வழியாய் அரை மணி நேரத்திற்கு பின் கிரஷுக்குள் நுழைந்தாள் ஜான்வி.. அப்போது போன் காலில் வந்த செய்தி காதில் விழுந்ததும் போட ஆரம்பித்த நடை இப்போதுதான் இங்கு வந்து நிற்கிறது.. பதட்டத்தோடு உள்ளே நுழைந்தவளின் பார்வை அந்த காலியாய் கிடந்த வெற்று கிரவுண்டில் சுற்றி கடைசியாய் தன் மகள் படிக்கும் வகுப்பில் பட்டதும்.. கால்கள் தன்னிச்சையாய் அங்கு நோக்கி ஓடின. டீச்சர்.. டீச்சர்.. அழைத்தபடி உள் நுழைந்தவளை லொக்.. லொக்.. என இருமிய படி இருந்த கிருத்திகா நிமிர்ந்து பார்த்து அம்மா.. எனப் பெற்றவளிடம் தாவினாள். பாப்பா.. பாய்ந்து வந்த குழந்தையை இரு கைகளாலும் கட்டி அணைத்து முகம் முழுக்க முத்தம் கொடுத்து தன் நெஞ்சுக்குள் புதைத்துக் கொண்டாள்.. என்னாச்சு டீச்சர்.. எப்படி திடீர்னு இவ்வளவு இருமல்.. காலையில விடும்போது நல்லா தானே இருந்தா.. என இன்னும் விடாத அழுகையும் பதட்டமும் பொங்கிக் கொண்டு கேட்க.. முதல்ல கொஞ்சம் தண்ணீர் குடிங்க.. என வாட்டர் பாட்டிலை திறந்து நீட்டினாள் ஆசிரியை. அவசரத்திற்கு ஆட்டோவும் கிடைக்காமல் ஓடி வந்திருந்த நிலையில் நீர்த்தாகம் தொண்டையை அடைக்க.....

கானலோ! என் காதலோ! 08

 யோசனையில் காலையிலேயே ஸ்டிரஸ் ஆகி போன மூளையை தூசு தட்டி அந்த பெரிய காம்பவுண்டுக்குள் நுழைந்தாள் ஜான்வி.. அந்த காலத்தில் வாங்கிய இடம் போலும்.. கொள்ளு தாத்தா வாங்கிய விஸ்தாரமான இடத்தில் பரந்து விரிந்து உயர்ந்திருந்தது அந்த பெரிய ஆபிஸ்.. இங்கு எப்பாடு பட்டாவது சேர்ந்து விட வேண்டும்.. என சிலருக்கு கனவு கம்பெனியும் கூட.. சிபாரிசு என்பதை தாண்டி திறமைக்கு மட்டுமே உரிய இடம் அது.. இரண்டு தலைமுறைக்கு முன் தாத்தா ஆரம்பித்து.. இன்று நிர்வகிக்கும் பேரன் வரையிலும் கூட இதே உத்தி தான்.. அதனால் தான் இது இத்தனை புகழ் பெற்றதாய் உள்ளதோ என்னவோ... ஜான்வியின் நல்ல நேரம் பக்கத்து வீட்டு ரிபரன்ஸ் என வந்து தன் திறமையால் வேலையும் வாங்கி விட்டாள். இதோ இப்போது தன்னை கடந்து சென்றவளை பார்த்து சினேகமாய் புன்னகைத்த படி செக்யூரிட்டி திரும்பி விரைப்பாய் நின்று கொள்ள.. உள்ளே நுழைந்தவளின் நடை திடுமென நின்றது அங்கு நடந்து கொண்டிருந்த ஏற்பாடுகளை கண்டு.. அது ஒரு சிவில் கம்பெனி.. பெரிய பெரிய இடங்களில் இருந்தும் கட்டிடம் கட்டும் வேலைக்கான ப்ராஜெக்ட் எடுத்து திறம்பட சொன்ன நேரத்திற்குள் சொன்னபடி கட்டிக் கொடுப்பதில் பெயர் போன...

கானலோ! என் காதலோ! 07

 பஸ்ஸில் இருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.. மறக்க வேண்டும் என தான் எண்ணுகிறாள்..  ஆனால் மீண்டும் மீண்டும் வேண்டாத தகாத அவன் ஞாபகங்களின் வருகையை தடுக்க முடிவதில்லை.. சின்ன சின்ன விஷயங்களிலும் அவன் முகம் தென்பட்டு அவளை சிதைக்கிறது.. உண்மையா லவ் பண்ணி தொலைச்சிட்டேன் போல.. விரக்தியான கண்ணீர் உகுதல் அவளிடம்.. ச்சே.. அப்படி ஒருத்தன நினைச்சு இன்னும் வருந்திக்கிட்டு இருக்கியா எனக் கேட்ட மனசாட்சின்னு கேள்விக்கு பதில் சொல்ல தெரியவில்லை.. என்னை இருந்தாலும் தன் குழந்தையின் தகப்பன் அல்லவா.. பதில் மொழி வந்தது. ஆனா அந்த குழந்தையே அவனது இல்லைனு.. உன் கேரக்டரோட நீ சொல்றியே குழந்தை.. அதையும் கலங்க படுத்திட்டு தான் அவன் போயிருக்கான்.. என கொஞ்சமும் பாராபட்சம் பார்க்காமல் சூடான இரும்பு கம்பியை அவள் நெஞ்சில் பாய்ச்சியது மனசாட்சி.. நடக்கும் நேரம் மீண்டும் அவன் நினைவுகளின் தொல்லை.. அன்று வண்டியில் அவளை அழைத்துச் சென்றவன் முன்மிரர் வழியாய் அவளின் முகம் அவ்வப்போது கண்டபடி ஆர் யூ ஓகே.. என கேட்டான்..  ஓகே தான்.. என்ற படி வலியில் முகம் சுழித்த கணம் எதிர்பாராது வந்திருந்த ஸ்பீடுபிரேக்காரில் வண்டி ஏறி...

கானலோ! என் காதலோ! 06

 கிரஷில் கிருத்திகாவை விட்டு பஸ் ஸ்டாப்பிற்கு நடந்து வந்து கொண்டிருந்தாள் ஜான்வி.. என்னவோ இன்று காலை எழுந்ததிலிருந்து மனதில் ஒரு தவிப்பு.. ஏன்  ஒரு மாதிரியா இருக்க ஜான்வி..  என குழந்தைக்கு துவட்டும் போதே இரண்டு முறை காரணம் கேட்டு விட்டான் அஷோக். தனக்கே என்னவென்று தெரியாத போது அவனிடம் மட்டும் என்ன கூறுவாள்.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே.. பொய்யாய் சிரித்து மழுப்பினாள். ஆனால் இன்னும் கூட அதே தவிப்பு உள்ளுக்குள் பரவி தான் இருக்கிறது.. அந்தத் தவிப்பில் தான் கிரஸுக்குள் சென்ற குழந்தையை ஒரு கணம் பூத கண்ணாடியாய் ஏக்க பார்வை கொண்டு கடந்த காலத்தை எண்ணி வேதனை கொண்டது..   வேலைகளில் தன்னை ஈடுபடுத்தி தன்னைத்தானே மறந்து கொள்ள தான் இப்படி அடி தடியாய் ஓடுகிறாள்..  ஆனால் மனதைப் பிடித்த பூஞ்சையாய் எப்போதும் ஏதோ ஒரு விஷயத்தை இந்த மூளை யோசித்து வருத்தி கொண்டே இருக்கிறதே.. அதிலும் இன்று ஒரு படிக்கு மேலாய் இந்த படபடக்கும் பட்டம்.. ச்சே தவிப்பு வேறு..  புரியாத சலனத்தோடு பஸ் ஸ்டாப்பிற்கு வந்து சேர்ந்திருந்தாள். அவ்வளவாய் கூட்டமில்லை.. நான்கு ஐந்து பேர் மட்டும் நின்றிருந்தனர். கை...

கானலோ! என் காதலோ! 05

 பார்த்து இருந்துக்கணும் பாப்பா.. யாரையும் தொந்தரவு பண்ணக்கூடாது.. எது வேணாலும் மிஸ்கிட்ட கேளு.. மிஸ் தருவாங்க.. குட் கேர்ள்லா இருந்துக்கணும்.. மதிய சாப்பாட வேஸ்ட் பண்ணாம சாப்பிடணும்.. அதுவும் முட்டை எல்லாம் கண்டிப்பா சாப்பிட்டடணும் என்ன.. என கிரஷ் வாசலில் நின்ற ரித்திகாவிடம் மண்டியிட்டு காற்றில் கலைந்த அவள் முடியை சரிப்படுத்தியபடி கூறி கொண்டிருந்தாள் ஜான்வி.. வழக்கமாய் அவள் கூறுவது தான் என்றாலும் இன்று தான் புதிதாய் கேட்பது போல் கவனமாய் கேட்டு தலையாட்டிக் கொண்டிருந்தாள் கிருத்திகா.. நீ கவலைப்படாதே மா.. நான் பாத்துக்கிறேன்.. மழலை சிட்டின் பேச்சில் பெரிய மனுஷ தோரணை..  கனிந்தன அவள் விழிகள்.. சிட்டோ திடீரென எதிரில் வந்தவர்களை கண்டு விழிகள் மலர்த்தியது.. ஹேய்.. தன் குரல் கொடுக்க வந்த இரண்டும் கூட அவள் வகுப்பு தோழிகளாம்.. அவளை விட அரை அடி உயரம்.. உச்சி குடுமியோடு நெருங்கிய குழந்தைகளிடம் பேசிய படி தோளில் ஆளுக்கு ஒரு பக்கமாய் கை போட்டு பெற்றவளுக்கு பாய் சொல்லி விட்டு நல்ல பிள்ளையாய் அவள் உள்ளே செல்ல..  இந்த வயதிலேயே இத்தனை மனமுதிர்ச்சியா.. மகளை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. ஆன...

கானலோ! என் காதலோ! 04

  அம்மா.. வலியில் அலறி மயங்கி விழுந்தாள் ஜான்வி.. அந்த ஒரு நொடியில் மருத்துவமனையில் இருக்கும் தாயும் வயிற்றில் இருக்கும் குழந்தையும் மட்டுமே கவனத்தில் நிற்க.. அடர்ந்த இருள் ஒன்று கண்களை மறைத்தன..  தான் அவர்களிடம் அகப்பட்டு விட்டால் இனி தன் வாழ்க்கை என்னாகும் என்பதை விட அவர்களால் தன் தாய்க்கோ குழந்தைக்கோ எந்த ஆபத்தும் வந்துவிடுமோ என்ற பயத்திலேயே மயங்கி சரிந்தாள் ஜான்வி.. ஒரு பொ**யா இருந்துகிட்டு என்ன திமிர்த்தனம் பண்றா.. இத்தனை ஆம்பளைங்க அடிச்சு போட்டு இருக்கா.. அவளை கட்டையால் அடித்தவன் சுற்றி கீழே கிடந்தவர்களை பார்த்து ஏளனமாய் காரி துப்பி விட்டு கீழே கிடந்தவளை ஒருகணம் விழியால் அள்ளிப் பருகினான்.. கீழே விழுந்ததற்கு அவள் உடை ஏற்ற இறக்கமாகி மறைமுக முகடுகள் ஆங்காங்கே கண்களுக்கு விருந்தாகி போக.. ஆசையோடு அவள் நோக்கி நீண்டன அவன் கரங்கள்..  அவள் தனக்கு வேண்டும் என்று தான் கூறியிருக்கிறான் சமர்த்.. அப்படியே வேண்டும் என்றா கூறி இருக்கிறான் மனதில் சிறு நயவஞ்சகம் தோன்ற.. கண்முன் இருக்கும் பெண் கனியை சுவை பார்த்து தன் தலைவனிடம் விடக் கூறியது அவனுக்குள் இருந்த கேவலமான மிருகம் ஒன்று.. அ...