முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கானலோ! என் காதலோ! 66

 ஆனால் எதிர்பாராத நேரத்தில் மிதா போன் செய்ததோடு.. அம்மா பேசுனாங்க.. விஷயத்தை சொன்னாஙக.. நீ உடனே  பார்க்குக்கு வா.. என்றதோடு போனை துண்டித்து இருந்தாள்.. முதலில் ஜான்வி சென்று பார்ப்பதை விட மிதாவிடம் பேசிவிட்டு சென்றால் நல்லது என நினைத்தவனாய் அடுத்த நிமிடம்  வண்டியை யூ டர்ன் அடித்திருந்தான் ஆர்யன்.. பச்சை புற்கள் முட்டி மோத நகரின் மையத்தில் இருக்கும் அந்த பார்க்கிற்கு அவனுக்கு முன்பாகவே வந்திருந்தாள் மிதா.. அவனை கண்டதும் கைய உயர்த்தி அழைக்க.. பாப்பா.. என வந்து நின்றவனின் முகம் அளவிற்கு அதிகமாக சோர்ந்து கிடந்தது..  அவளை நேருக்கு நேராய் பார்க்கவும் திராணியற்று தவிப்போடு தலையை தொங்கி கொண்டான் ஆர்யன்.. எத்தனை முறை அவள் அப்படிபட்டவள் அல்ல என கூறி இருப்பாள்??  அம்மா எல்லா விஷயத்தையும் சொல்லுச்சு.. நேரடியா விஷயத்திற்கு வந்திருந்தாள் மிதா.. உடனடியாக தகிப்பு பரவியது அவனிடம்.. பாரு.. பாரு பாப்பா.. எவ்வளவு கேவலமா என்னை ஏமாற்றி இருக்காங்க..  அவங்களை நான் எவ்வளவு நம்பினேன்.. எனக்கு இப்படி ஒரு துரோகம் பண்ண அவங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு.. என்றவன் நெஞ்சை வலியோடு நீவி விட...

கானலோ! என் காதலோ! 65

 நீ போற வழி தானே என்ன விட்டுடு.. என இரு கைகளிலும் பையில் தூக்கிக்கொண்டு நின்ற தாயிடம் மறுக்க முடியாமல் போய் வண்டியில் ஏறுங்க..  என சிடுசிடுத்த அடுத்த நிமிடம்.. லிப்டில் இறங்கி வண்டியில் ஏறி அமர்ந்திருந்தார் மணி. செல்லும் வழி என்பதால் ஆரியனும் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை.. முதல்ல தீபா வீட்டில் இருந்து ஆரம்பிக்கலாம் மணிமேகலை குரலை தொடர்ந்து அடுத்த 20 நிமிடத்தில் அவர்கள் வீட்டு வாசலில் காரை நிறுத்தி இருந்தான. சரிப்பா நீ பார்த்துப் போ.. என மணி கூறி முடிப்பதற்குள்ளாகவே வண்டியை கிளப்பியிருந்தான் ஆரியன்.. வீட்டில் இருக்கும் யாரையும் பார்ப்பது என்ன பேசக்கூட பிடிப்பதில்லை.. அவனைப் பொறுத்தவரை இது கட்டாய கல்யாணம்..  கணன்ற நெஞ்சோடு வந்து கொண்டிருந்தான் அந்த நெடுஞ்சாலையில்.. இன்னும் பத்து நிமிடத்தில் அலுவலகத்தை அடைந்து விடலாம் என்ற தூரத்தில்.. திடீரென புதுவிதமான சத்தம்.. எங்கிருந்து வருகிறது.. விழிகளை சுற்றி அலைய விட்டவன் அப்போதுதான் டேஷ்போர்ட்டின் ஒரு ஓரமாய் கிடந்த போனை பார்க்கிறான்.. ப்ச்..  இந்த அம்மா போனை எடுக்காம போய்டுச்சா.. இப்ப எப்படி மத்தவங்க வீட்ல இருக்காங்களா இல்லையா...

கானலோ! என் காதலோ! 64

 ம்மாஹ்.. நீங்க எவ்வளவுதான் கூப்பிட்டாலும் என்னால வேலைய விட்டுட்டு இப்படி பத்திரிகை வைக்க எல்லாம் அலைய முடியாது.. சட்டை பட்டனை போட்டபடி சிடுசிடுத்தான் ஆரியன். இருக்கும் மனநிலையில் அப்படி பேசாமல் போனால் தான் ஆச்சரியம் என உணர்ந்து கொண்டவளாய் மணிமேகலையின் குரல் கீழ் இறங்கியது.. காரணம் செய்த வேலை அப்படி ஆயிற்றே..  அன்று ரூபா தற்கொலை முயற்சி செய்ததெல்லாம் உண்மைதான்.. குரல்வளை அறுபடியும் நிலையில் அவளை மருத்துவமனையில் சேர்த்ததும் நிஜம் தான்.. ஆனால் சேர்த்த சில மணி நேரங்களிலேயே அவளை நல்லபடியாக பிழைக்க வைத்து விட்டனர் அங்கிருந்த மருத்துவர்கள்.. தண்ணீர் குடிச்சிட்டு வரேன் என நேக்காக மறுபக்கமாய் நடந்த மணிமேகலை கடந்து சென்ற டாக்டரை வழிமறைத்தாள். பயப்படாதீங்க.. அவங்க நல்லபடியா கண்ணு முழிச்சிட்டாங்க..  என்ற டாக்டரிடம் அவள் மூச்சு நிம்மதியாக வெளிப்பட்டது. நல்ல வேலையா கைக்கு வரப்போகும் சொத்து விட்டுப் போகவில்லை. நான் ஒரு நிமிஷம் அவள பாக்கலாமா.. தவிப்போடு கேட்டதில் உள்ளே வர அனுமதி தந்தனர்... உள்ளே  படுத்த படுக்கையாக வாடி கிடந்தவளை கண்டு மௌனமாய் வாய் பொத்தி கதறினார் மணிமேகலை.. துளி அள...

கானலோ! என் காதலோ! 63

 ஏற்கனவே அந்த மண்டபத்தை பார்த்ததிலிருந்து ஒருவித தவிப்பு மனநிலையோடு இருந்தவள் திடீரென ஆரியன் அந்த அறைக்குள் இருப்பதை கண்டு மூச்சு அடைத்துப் போனாள்..  அதிலும் கதவில் கால் சாய்த்து அவன் நின்ற விதத்தில்.. ஏற்கனவே அலுவலகத்தில் அவனோடு தனியறையில் இருந்த ஞாபகங்கள் வந்து செல்ல.. ஐயோ.. இப்போது என்ன நடக்கப் போகிறதோ..  அவள் நெஞ்சுக்கூடு பதற்றத்தில் ஏறி இறங்கியது.. தவறான நோக்கில் அவன் நடந்து கொள்ள மாட்டான் என அறிந்தாலும் கடந்த சில நாட்களாய் அவள் கொண்டிருந்த பயமும் தனிமையும் வேதனையும் அவளை ஒருவித இறுக்கத்திற்கு உள்ளாக்கியது என கூறலாம்.. பயத்தில் ஒரு அடி பின்னெடுத்து வைத்தவளை இடுங்கிய கண்களோடு பார்த்தவனின் முகத்தில் நிச்சயம் அது வேதனையின் சாயல்தான்.. ஹ்ம்ம்..  இதழ்கள் வரள புன்னகைத்தான்.. உனக்கு அவ்வளவு தான் என் மேல இருக்கிற நம்பிக்கை இல்லை.. வருத்தத்தோடு கேட்டுக் கொண்டவன் அதுக்கேத்த மாதிரி தானே நானும் நடந்திருக்கேன்.. உன் உணர்வுகளுக்கும் விருப்பத்துக்கும் கொஞ்சம் கூட மதிப்பு கொடுக்காமல்.. என்ன சொல்ல வரேங்குறத கூட..  கேட்காமல் எனக்கு நானே கொடுத்துகிட்ட தண்டனை இது..  சோர்வ...

கானலோ! என் காதலோ! 62

 அடர் ப்ரவுன் நிறமும் மஞ்சள் நிற பார்டருமாய் இருந்த அந்த லெஹங்காவை இடையோடு விட்டு முன்னிழுத்து பின் குத்தினாள் மிதா.. அவள் பால்வெள்ளை நிறத்திற்கு அந்த உடை அத்தனை எடுப்பாய்.. கண்ணாடி முன் நின்று ஒரு தரம் சரி பார்த்தபடி..  பின்னே இருந்து அத்தே.. அத்தே..  என குட்டி கைகளால் பாவாடையை இழுத்துக் கொண்டிருந்த குழந்தையிடம் மண்டியிட்டாள். அத்தை ரெடியாயிட்டேன்.. பாப்பாவ கிளப்பி விடவா.. கேட்டதும் குட்டியின் விழிகள் மலர்ந்து தலையாட்டின.. அவளுக்கென எடுத்து வைத்திருந்த வெண்மையும் பச்சையுமான பட்டுப்பாவாடையை  தலைவழியாய் விட்டு இடுப்பில் கட்டி முடித்து .. குட்டி கைகளை சட்டைக்குள்ளாக விட்டு பின்னே பின் குத்தினாள்.. மென்மையாய் பவுடர் அடித்து பொட்டு வைத்து அலங்காரம் முடிக்க.. உண்மையாவே அழகி தான் நீ.. நெற்றி முடித்து கொண்டவளின் ன் பார்வை குழந்தையை விட்டு அவளைப் பெற்றவளிடம் தாவியது.. ஏண்டி குழந்தையே கிளம்பிட்டா.. நீ இப்படி குளிச்சிட்டு வந்து டிரஸ் மட்டும் போட்டதோட உட்கார்ந்து இருந்தா என்ன அர்த்தம்.. சீக்கிரமா எழுந்து கிளம்பு.. என்றவளை சோர்வான விழிகளோடு நிமிர்ந்து பார்த்தாள் ஜானு... பார்வையே...

கானலோ! என் காதலோ! 61

 திடீரென லைட் ஆன் செய்யப்பட்டதில் அதிர்ந்து கண்களில் வழிந்து நின்ற அழுகை துளிகளை அவசரமாய் துடைத்துக் கொண்டாள் ஜானு..  ஜானு.. தோழியை அறிந்தவளாய் அவள் தோளில் கை வைத்த படி.. என்னடி ஆச்சு..  இங்க வந்து ஏன் அழுதுகிட்டு இருக்க..  அவள் கேட்டதும் பாய்ந்து அவளை கட்டிக்கொண்டவளின் கண்ணீர் துளிகள் இன்னொருவளின் தோளை நனைத்தன..  ஜானு.. விடாப்பிடியாய் அவளை இழுத்து விலக்கி நிறுத்தினாள் மிதா. என்னடி ஆச்சு.. ஏன் இப்படி அழுதுகிட்டு இருக்க..  அவள் கேள்விகளுக்கு இவளிடம் பதில் இல்லை.. தேம்பி கொண்டிருந்தவளை விடாப்பிடியாய் முறைத்தபடி..  ஒருவேளை அம்மா அப்படி பேசினதுக்காக அழுகிறியா..  அதுக்கு தான் நான் அப்பவே சாரின்னு சொல்லிட்டேனே..  என்றவள் திடீரென விழி விரித்தாள்.. ஒருவேளை அண்ணன்..  கல்யாணம் பண்ணிக்க போறது?? என ஆரம்பித்த வேளையிலேயே.. ச்சே ச்சே.. அப்படியெல்லாம் எதுவும் இல்லைன்னு நான் அன்னைக்கே சொன்னேனே, வார்த்தையை முடிக்க விடாமல் கூறியிருந்தாள் ஜானு. பின்ன என்னதான் டி பிரச்சனை..  ஏன் இந்த நைட் நேரம் இங்க வந்து உட்கார்ந்து அழுதுகிட்டு இருக்க.. பதில் சொல்ல முட...

கானலோ! என் காதலோ! 60

 என்னடி ஆச்சு.. திடீர்னு வெளியே ஓடிவந்தியே.. ஒன்னும் பிரச்சனை இல்லல்ல.. கையில் குழந்தையோடு நின்று மிதா கேட்க.. அ.. அஷோக்.. அவள் பார்வை அவன் வண்டி சென்ற வழியை வெறித்தது.. என்ன அசோக்..  எனக்கு ஒன்னும் புரியல.. இdடு்கிய புருவங்களோடு  கேட்டவளைத் தொடர்ந்து.. அவன் பெயரை கேட்டதுமே அப்பா.. அப்பா.. என ஆரம்பித்த குழந்தையை கண்டு சட்டென பொங்கிய கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல்  அமைதியாய் உள்ளே சென்றாள் ஜானு..  இதுக்காக தான் உன் வீட்டுக்காரர் போயிருக்காருனு அப்போவே வாய் திறந்து சொல்லி இருந்தா தான் என்னவாம்.. நாங்க கூட உங்க ரெண்டு பேருக்கும் சண்டையோ நெனச்சு எவ்வளவு பதறிட்டோம் தெரியுமா..  என அவள் சாலையில் இருந்து வீட்டிற்கு வருவதற்குள் அப்போது சண்டையா எனக்கேட்ட அனைவரும் நலம் விசாரிப்பது போல் கூறிவிட்டு நகர... எப்படியோ இப்போதைக்கு அவர்கள் வாய்க்குள் தான் அவலாக வேண்டிய அவசியம் இல்லை.. நிம்மதி பெருமூச்சு வெளிப்பட்டது இவளிடமிருந்து.. ஆனாலும் தான் அவ்வளவு கூறியும் அவன் வந்திருக்கிறான்?? அதுவும் சரியான நேரத்தில்!! ஏன்?? எப்படி?? மெல்ல அடி எடுத்து  வீட்டுக்குள் நுழைந்தவளுக்க...

கானலோ! என் காதலோ! 59

 நாட்கள் அதன் போக்கில் கடக்க இதோ ஒரு மாதம் முடிந்திருந்த நிலையில் பிள்ளையும் நன்றாகவே தேறி இருந்தாள்.. கட்டையும் பிரித்தாயிற்று..  அப்பா எங்கே அவனைப் பார்க்க வேண்டும் என ஆரம்ப காலகட்டங்களில் அடாவடியாய் அடம்பிடித்தவளை ஒருநாள் சமாதானப்படுத்துகிறேன் என மிதா தனியே அழைத்துச் சென்று என்ன கூறினாளோ அதிலிருந்து அசோக்கை பற்றி கேட்பதையே மொத்தமாய் நிறுத்தி விட்டிருந்தாள் கிருத்தி. அதேசமயம் மிதாவுடனும் நன்றாய் ஒட்டிப் போனாள். அப்படி என்ன கூறினாள் என கேள்வி எழுந்தாலும் எப்படியோ அவனைப் பற்றி கேட்காது குழந்தை உண்பதிலும்.. அடம் பிடிக்காமல் பள்ளிக்கு கிளம்புவதிலும் ஜான்விக்கு பெருத்த நிம்மதி.. மிதாவும் கூட அன்றைய நாளுக்கு பின் அவனைப் பற்றி எதுவுமே பேசி இருக்கவில்லை.. அவனைப் பற்றி அத்தனை உண்மைகளை தேடி கண்டுபிடித்து கூறியவள் அதற்குப்பின் ஒரு வார்த்தை கூட அவனைப் பற்றி யோசி என கூட கூறாமல் இருக்கிறாளே.. அப்போது ஜான்வியின் விழிகள் தான் மிதாவின் மீது பட்டு மீளும்.. அவ அப்படி கேக்கணும்னு விரும்புறேன்னா.. எழும் கேள்வியில் நிச்சயமாக இல்லை.. ஆணித்தனமாய் பதில் கூறி உள்ளேயே அடக்கிக் கொள்வாள்.. இப்போதெல்லாம்...